நமக்குத் தெரிந்தது எல்லாம் ரோஜப்பூ,மல்லிகைப் பூ.ஏன் எனில் ஆண்கள், பெண்களுக்கு இதைத்தான் வாங்கித்தருகிறார்கள்.அதையே தான் பெண்களும் விரும்புகிறார்கள்.நிலைமை இவ்வாறு இருக்கும் போது நாம் எப்படிச் சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி அறிந்திருக்க முடியும்..சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி நான் அறிய விரும்பினேன்.அதன் விளைவே இப்பதிவு..இதனை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்…..
பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று குறிஞ்சிப் பாட்டு. "ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவித்தலின் பொருட்டு இப்பாட்டு கபிலரால் பாடப்பட்டது" .குறிஞ்சி நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும்.இங்கு தலைவியும்,தோழியும் சுனையில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்கின்றனர்.அவ்வாறு பறிக்கப்படும் மலர்கள் குறிஞ்சி நிலத்தினைச் சார்ந்தவை மட்டுமல்ல.இங்கு கபிலர் அனைத்து நிலப்பூக்களையும் குறிப்பிடுகின்றார்.அவற்றில் குறிப்பிடத்தக்கது 99 வகையான மலர்கள் மட்டுமே.அவை கீழே தரப்பட்டுள்ளன...
கபிலர் கூறும் குறிஞ்சிப்பாட்டுச் செய்யுள்:
“ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,
உரிதுநாறு,அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை,மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி,வகுளம்,பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை,வேரல்,சூரல்,
குரீஇப் பூளை,குறுநறுங் கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங் கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங்கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமாத்
தில்லை,பாலை,கல்இவர் முல்லை,
குல்லை,பிடவம்,சிருமா ரோடம்,
வாழை,வள்ளி,நீள்நறு நெய்தல்,
தாழை,தளவம்,முள்தாள் தாமரை,
ஞாழல்,மெளவல்,நறுந்தண் கொகுடி,
சேடல்,செம்மல், சிறுசெங் குரலி,
கோடல்,கைதை,கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி,மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர்,மராஅம்,பல்பூந் தணக்கம்,
ஈங்கை,இலவம்,தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு,அமர் ஆத்தி,நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம்,பல்பூம் பிண்டி,
வஞ்சி,பித்திகம்,சிந்து வாரம்,
தும்பை, துழாஅய்,சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி,நறவம்,நறும் புன்னாகம்,
பாரம்,பீரம்,பைங்குருக் கத்தி,
ஆரம்,காழ்வை,கடிஇரும் புன்னை,
நரந்தம்,நாகம்,நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும்,வேங்கையும் பிறவும்,
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி”
இப்பாடலில் உள்ள பூக்கள்:
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95.நாகப்பூ சிறுநாகப்பூ- Ironwood
96.நள்ளிருணாறி இருவாட்சி.
மலையும் மலையை சேர்ந்த பகுதியை
ReplyDeleteமுதன் முதலில் தமிழ் உலகம் அறிய பதிவு
செய்தவர் கபிலர். அவர் அறிமுகம் செய்த
99 மலர்கள் எங்கே போனது என தெரியவில்லை. ராஜசேகர் அவர்களின்
பதிவுக்கு நன்றி .
அன்புடன்
எல்.தருமன்
்். 18.பட்டி.